maganin manam - magan thanthai pasam image with quotes

என்னவோ செய்கிறாய்!

பார்க்கிறாய்
பார்க்க வைக்கிறாய் தவிக்கிறாய்
தவிக்க வைக்கிறாய் மனதில் என்னடி
மறைத்து வைக்கிறாய் மௌனம் பூசியே
ஒளித்து வைக்கிறாய் நீயாய்
சொல்வாயா நானாய் சொல்வேனோ
யாரும் சொல்லாமல் காதல் வெல்வோமோ சிரிக்கிறாய்
சிரிக்க வைக்கிறாய் சில நொடி கரைய வைக்கிறாய்
நுரைக்கிறாய் நுரைக்க வைக்கிறாய் தரையிலே மிதக்க வைக்கிறாய்
பார்வை ஏட்டில் பதிய வைக்கிறாய்
வேர்வை மழையில் நனைய வைக்கிறாய்
ஓசையின்றி உடைய வைக்கிறாய்
ஒற்றை ஆளாய் உளற‌ வைக்கிறாய் ‌வளைகிறாய்
வளைய வைக்கிறாய் நுழைகிறாய்
நுழைய வைக்கிறாய்
களைகிறாய்‌‌ களைய வைக்கிறாய்
இழைகிறாய் இழைய‌ வைக்கிறாய்
தளர்கிறாய் கொடியாய் தளர வைக்கிறாய்
தலையணைக் கனவை வளர‌ வைக்கிறாய்
மதுவாய் மெல்ல மயங்க வைக்கிறாய்
மலர்களில் வண்டாய்‌  முயங்க வைக்கிறாய்
மாலை செந்தூரம் வாயில் வந்தேறும்
மடியில் உன் தேகம் மனதில் சந்தோஷம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்