அறிவுரை கதைகள்

தோட்டத்தில் புதிதாக வாழைக்கன்று நடப்பட்டது. அதன் அருகே ஏற்கனவே தென்னை மரம் இருந்தது. வாழைமரம் தென்னை மரத்திடம் கேட்டது, நீங்கள் இங்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகிறது?, தென்னை மரம் சொன்னது. ஒரு வருடம். ஒரு வருடம் என்று சொல்கிறாய். ஆனால் என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா. இருக்க? ஏதேனும் நோய் உள்ளதா? என்று கேட்டுவிட்டு பெரிய ஜோக் சொன்ன மாதிரி சிரித்தது. தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது. நாளுக்கு நாள் வாழை மரத்தின் வளர்ச்சி பெரிதாகிக் கொண்டே இருந்தது. இரண்டு மாதங்களில் தென்னங்கன்றை விட உயரமாக வளர்ந்தது. வாழைமரத்தின் கேலியும் கிண்டலும் அதிகமாகிக்கொண்டே போனது. தென்னங்கன்றோ சலனமில்லாமல் எப்போதும் போல் புன்னகைத்தது.

வாழை நட்ட ஒரு வருடத்தில் தென்னையை விட இரண்டு மடங்கு உயரம் வளர்ந்துவிட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ? ஒரு கட்டத்திற்கு மேல் வளரவிடாமலே வச்சிருக்காரே! நீ இருக்கின்ற மண்ணில் தான் நானும் இருக்கிறேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனால் நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதித்தது அவ்வளவுதான் போல என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.

தென்னங்கனிடமிருந்து புன்னகையைத் தவிர பதில் இல்லை. இன்னும் சிறிது நாட்கள் சென்றது. அதிலிருந்து ஒரு அழகான மலர் வெளிப்பட்டது. பூவும், காய்களுமாக அழகாக மாறியது. அதன் பெருமை இன்னும் அதிகமானது. இரவும் பகலும் சிரித்துக்கொண்டே கழிந்தது. நல்ல உயரம். அழகான பிளவுபடாத இலைகள், கம்பீரமான குலை. வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின.

ஒரு மனிதன் தோட்டத்திற்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைப்பழங்களைத் தட்டினான். தென்னை மரத்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இதை விட இதில் பெருமைப்பட வேறு என்ன இருக்கிறது? வாழை மரத்தின் மகிமை அடங்குவதற்குள், ஒரு புதிய மனிதன் கத்தியுடன் முதல் மனிதன் அதை பிடித்து அதன் கிளைகளை வெட்டினான். வாழைமரம் அலறியது.

அதன் பெருமையெல்லாம் மறைந்து விட்டது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்தது நடந்தது. ஆம், வாழை மரம் வெட்டப்பட்டது. ஓராண்டு நீடித்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெட்டப்பட்டு தோலுரிக்கப்பட்டது. தென்னை மரம் பழையபடி சிரித்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.

இந்த அறிவுரை கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்: ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல? கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம், வேகமாகவே காணாமல் போகும். ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதன் முடிவு நல்லது. பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்