எலிகளின் நட்பு

நகரத்து எலியும் கிராமத்து எலியும் || The City Rat The Village Cat

ஒரு காலத்தில் இரண்டு எலிகள் இருந்தன. ஒன்று நகரத்தில் வசித்து வந்தது. மற்றையது கிராமத்தில் வசித்து வந்தது. அவை ஒன்றுக்கொன்று வெகு தொலைவில் வாழ்ந்தாலும் இரண்டும் உறவினர்கள்.

ஒரு நாள் நகரத்து எலி கிராமத்து எலியைப் பார்த்து வர சென்றது. கிராமத்து எலி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கிராமத்து எலி பூக்கள் பதர்வேலிக்கு இடையே தனி அறை அமைத்து, அதன் தரையை மிக மென்மையான புல்லால் அமைத்து இருவரும் பல மணி நேரம் நிம்மதியாக உறங்கினர். பின்னர் அவைகள் எழுந்து அருகில் உள்ள நீர்க்குழாய் ஓடையில் மது அருந்தின. இரவில் அவைகள் வயலில் பழுத்த பூசணிக்காயையும் சோளத்தண்டுகளையும் சாப்பிட்டன. அவைகள் ஒரு குடிசைத் தோட்டத்தைச் சுற்றி ஓடி, நிலவின் வெளிச்சத்தில் வெளியே வீசப்பட்ட உணவு துண்டுகளை எடுத்தன.

கொஞ்ச நாள் கழித்து நகரத்து எலி ஊருக்குத் திரும்பவேண்டும் என்றது “இன்னும் கொஞ்ச நாள் இரு” என்றது கிராமத்து எலி.

“நன்றி,” நகரத்து எலி கூறியது. “ஆனால் நான் வீட்டிற்கு செல்ல வேண்டும். உங்கள் கிராமபுற வாழ்க்கை முறை மிகவும் அருமையாக உள்ளது. ஆனால் எனது நகரில் உள்ள உணவினை நான் இழக்கின்றேன். நான் பால்கட்டி, மாபண்டம் மற்றும் அணிச்சல் என்பவற்றை இழக்கின்றேன். உங்கள் புல் மிகவும் வசதியாக இருந்தாலும், நட்சத்திரங்கள் மிகவும் அமைதியாக இருந்தாலும் பிரமாண்டமான அரங்குகளையும் விளக்குகளையும் நான் இழக்கிறேன். தயவுசெய்து நான் வசிக்கும் இடத்தை வந்து பார். நான் சொல்வதை நீங்கள் பார்ப்பீர்கள் என நம்புகின்றேன். அங்கு ஒரு நல்ல வாழ்க்கையின் ஒரு காட்சியை என்னால் கொடுக்க முடியும் என்றது நகரத்து எலி.

நகரத்து எலி சென்றதும் கிராமத்து எலி சுற்றிப் பார்த்து எவ்வளவு ஏழையாக இருக்கின்றோம் என்று நினைத்தது. அந்த எலி தனது வீட்டில் பளபளப்பான மாடிகள் மற்றும் விளக்குகள் இல்லாததைக் கண்டது. எனவே அது தனது பைகளை எடுத்துக்கொண்டு நகரத்து எலியை சந்திக்க சென்றது.

கிராமத்து எலியை பார்த்ததும் நகர எலி மிகவும் மகிழ்ச்சியடைந்தது. அது தனது கிராமத்து உறவினரை தனது வீட்டிற்கு வரவேற்றது. நகரத்து எலியின் வீடு ஒரு பெரிய மாளிகைக்குள் இருந்தது. வீட்டில் அற்புதமான விளக்குகள் மற்றும் பளபளப்பான மாடிகள் இருந்தன. சுவர்களில் உயரமான தூண்களும் பிரமாண்டமான ஓவியங்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. கிராமத்தில் அதன் வீடு எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை கிராமத்து எலியால் பார்க்க முடிந்தது.

மாலையில், கிராமத்து எலியை பெரிய உணவு வீடுதியில் உள்ள மேஜைக்கு கொண்டு சென்றது. மேஜையில் கிராமத்து எலி இதுவரை பார்த்திராத உணவுகள் நிரம்பியிருந்தன. ஒயின் மற்றும் அணிச்சல் மற்றும் பச்சடி மற்றும் பால் கட்டி இருந்தது. மேலும் இரண்டு எலிகளும் மேசையின் ஒரு முனையிலிருந்து மற்றொறு முனைக்கு ஓடின.

“கிராமப்புறங்களில் கிடைக்கும் சிறு துண்டுகளை விட இது சிறந்ததல்லவா?” பெருமிதத்துடன் கேட்டது நகரத்து எலி.

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்