நகைச்சுவை கதைகள் – தெனாலிராமனும் மிக பெரிய பைல்வானும் 

ஒரு நாள் தெனாலி ராமனும் அவன் மனைவியும் ஹம்பிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு கிராமத்தில் நின்றனர், அங்கு பளு தூக்கும் வீரரைப் பார்க்க முழு கிராமமும் கூடி இருப்பதைக் கண்டார்கள். தன் பெரிய கைகளாலும், தடித்த தசைகளாலும், 500 கிலோ அரிசி மூட்டையை எளிதாக பைல்வான் எடுத்தான்.

தெனாலி ராமனுக்கு பக்கத்தில் இருந்தவர், 500 கிலோ அரிசியை தூக்குவது எளிதல்ல என்று கூறினார். அதற்கு தெனாலி ராமன் இது என்ன ஆச்சர்யம் என்னால் இதைவிட பல மடங்கு அதிகமான எடை உள்ள மலையை கூட தூக்க முடியும் என்று சத்தமாக கூறினான்.
பைல்வான் மற்றும் மக்கள் அனைவரும் வேடிக்கையாக தெனாலியை திரும்பி பார்த்தனர். தெனாலி அருகில் இருந்த மலையை காட்டி இதை என்னால் தோளில் சுமக்க முடியும் என்று கூறினார். கிராம மக்கள் அனைவரும் தெனாலிக்கு வழிவிட்டு உற்சாகமாக கை தட்டி ராமனை ஊக்கப்படுத்தினர்.

தெனாலி பைல்வானிடம் இந்த அரிசி மூட்டையை சுமப்பதற்கு எவ்வளவு காலம் பயிற்சி செய்தீர் என்று கேட்டார். பைல்வான் 3 மாதங்கள் என்று சொன்னார். உடனே தெனாலி கிராம தலைவரிடம் நான் அதிக எடையை சுமக்க எனக்கு 6 மாதங்கள் தேவைப்படும் மற்றும் எனக்கு தங்குவதற்கு வசதியான இடம், சாப்பிடுவதற்கு ஊட்டமளிக்கும் உணவு மற்றும் தினசரி மசாஜ்கள் தேவை என தெனாலி அறிவித்தார்.

முழு கிராமமும் இதற்கு ஒப்புக்கொண்டனர். தெனாலியின் இந்த சாதனையை பார்க்க ஊர் மக்கள் அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.
ஒவ்வொரு நாளும், அவருக்கு உணவு கொண்டு வரப்பட்டு மசாஜ் செய்யப்பட்டது. தெனாலியும் அவரது மனைவியும் 6 மாதங்கள் ஆடம்பரமாக வாழ்ந்தனர். கடைசி நாள் வந்ததும், தெனாலி என்ன செய்யப் போகிறார் என்று காத்துக்கொண்டிருந்தது முழு கிராமமும் மலையின் அடிவாரத்தில் கூடியது.

தெனாலி கிராமத்தலைவரின் அருகில் நின்று, “சரி, அதை எனக்குக் கொடுங்கள்?” என்றான். “என்ன கொடுங்கள்?”, “நீங்கள் மலையை எடுக்க வேண்டும்!” என்று கிராமத்தலைவர் கூறினார். “நான் மலையை எடுப்பேன் என்று சொல்லவே இல்லை, தோளில் சுமப்பேன் என்று தான் கூறினேன். எனவே மலையை எடுத்து என் தோளில் வையுங்கள் நான் சுமக்கிறேன் என்றான்” தெனாலி செய்ததை உணர்ந்த ஊர் தலைவர் சிரிக்க ஆரம்பித்தார். “உங்களுக்கும் உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் நான் தலைவணங்குகிறேன், மிகவும் புத்திசாலித்தனமுள்ள மனிதன் இந்த தாழ்ந்த மலையை சுமக்க கூடாது என்றான்.

இந்த நகைச்சுவை கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் பாடம்: தெளிவான அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தால் எந்த ஒரு சவாலையும் சந்திக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்