முயற்சி திருவினையாக்கும்

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் இருந்தனர், விவசாயிக்கு வயது முதிர்வின் காரணமாக இறக்க நேரிட்டபோது, தனது குழந்தைகள் பொறுப்பற்றவர்களாக இருப்பதைப் பற்றி அவர் கவலைப்பட்டார். அவர் தன் நிலத்தை தன் பிள்ளைகளுக்குப் பங்கிட்டு கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்த நிலங்களின் ஒரு அடி ஆழத்தில் புதையல் இருப்பதாக கூறினார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். மூன்று மகன்களும் தங்கள் தந்தை செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பிறகு, அவர் கூறிய புதையலைப் பெறுவதற்காக நிலத்தில் தோண்டத் தொடங்கினர். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்திற்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து போனார்கள் முயற்சி வீணாக வேண்டாம் என்று எண்ணி தோண்டிய அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல் கிடைத்ததுஅறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். லாபம். இப்படி உழைப்பால் வரும்

முயற்சி திருவனையாக்கும் கதைகள் உங்களுக்கு கற்பிக்கும் நீதி: முயற்சி திருவனையாக்கும், உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம்

2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்