தன் குடும்ப நலனுக்காக.

ஓலைக் குடிசையில் வாழ்ந்தாலும் யாரிடமும் அவள் பிட்சை கேட்டதில்லை!கண் பட்ட இடம் எல்லாம் ஆடவர்கள் என்றாலும் நிமிர்ந்து யாரையும்ஒரு நொடியேனும் கண்டதில்லை!உடம்பு முடியாமல் இருந்தாலும் அவள் பணிக்கு செல்லாமல் இருந்தது இல்லை!குடும்ப பாரம் முழுக்க சுமக்கும் அந்த பெண்ணுக்கோ தனக்கென்று சொந்தமாய்சேலை வாங்க கூட வழி இல்லை!பாதை எங்கும் ஈக்கள் மொய்த்தாற்போல் அவளை நோட்டமிட்டபடியேகிடக்கும் சில மனித ஜந்துக்கள்!பெண் என்பதையும் மறந்து அவளின் மனதை காயப்படுத்தும் நோக்கில்செய்யும் சிலரின் ஏளனங்கள்!ஆண் மகன்கள் சிலரின் தப்பான பார்வைகள்!இது போன்ற அனைத்தையும் கண்டும் காணாதது போலபழகிக் கொண்டாள் அந்த முதிர் கன்னி தன் குடும்ப நலனுக்காக.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்