வீண்பேச்சு பேசுபவரிடமும் வலுச்சண்டை தேடுபவரோடும் சேரக்கூடாது. ஒருநாளும் பொய் சாட்சி சொல்லக்கூடாது. தந்திரமாய்ப் பேசிக்கலகமிடக் கூடாது. ஒரு நாளும் தெய்வத்தை மறக்கக்கூடாது. இறக்கும் நிலை வந்தாலும் பொய் கூறக்கூடாது. நம்மை ஏசிய உறவினரிடம் உதவி கேட்கக்கூடாது. குறி கூறும் குறவள்ளி மணவாளன், முருகப் பெருமான் நாமத்தைக் கூறுவாய் மனமே!.
