தமிழ் பதிவுகள் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் !!!
தமிழ் பதிவுகள் மூலம் சிறந்த தமிழ் காதல் கவிதைகள், தமிழ் காதல் வரிகள், தமிழ் காதல் புகைப்படங்கள் பதிவிறக்கம் மற்றும் புகைப்படங்களை பகிரலாம்.
ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களை நேரடியாக தொடர்புக்கொள்ளவும்
Page 17 of 24
மதிக்கின்ற ஒரு உறவு
உன்னைச் சுற்றி ஆயிரம் உறவுகள்இருப்பதை விட உன்னையும் உன்உணர்வுகளையும் மதிக்கின்ற ஒருஉறவு இருந்தாலே போதும்.வாழ்க்கை இனிக்கும்! 0

September 23, 2021
அன்பு செய்யுங்கள் சக மனிதர்களிடம்
மற்ற எல்லாகுணங்களையும்மறக்கச் செய்யுமளவுஅன்பு செய்யுங்கள்சக மனிதர்களிடம்! 0



மனம் நிறைந்த அன்புடன்
மனம் நிறைந்த அன்புடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் சந்தோஷத்தை கொண்டு வந்தே தீரும். 0



September 22, 2021
பேரியாழ் மீட்டி வருகிறாள்
பட்டிழை தரித்த புடவை மடிப்புகளில் நரம்புகள் இறுக்கி காற்றும் மயங்க பேரியாழ் மீட்டி வருகிறாள் அவள் நடையிடும் ஜதியில்! 0



September 21, 2021
எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்
பாதங்கள் மண்ணிலே படியாதிருப்பின் சுவடுகள் எங்ஙனம் உன்பெயர் சொல்லிடும்; படிகளின் உயரம் குறையாது என்றுமே பயணிக்காதிருப்பின் பக்கமும் தூரமே; எடுத்து நீ வைத்திடு ஓரடி உன் எதிரியும் அஞ்சுவான் ஒரு நொடி! 0



வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை
வெண்ணிலா எழுதும் ஒளிப்பெரும் கவிதைகளை ஜன்னல் புத்தகத்தில் தினம் தினம் படிக்கிறேன்! 1



கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்
உன்னைப் போன்று மழையையும் மழையைப் போன்று உன்னையும் நான் கண்ட கணமே நனைகிறேன் பேரின்பத்தில்! 0



September 20, 2021
இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி
ஒற்றை இதழ் செங்காந்தல் மலரன்ன ஒளி வனப்பில் மையல் கொண்டு… பற்றி அணைத்து மென் காற்று முத்தமிட எத்தனிக்க.. வெட்கித் தலை கவிழ்ந்து புகைச் சேலை முந்தி எடுத்து.. தனை மறைத்து மருள் சூழ இருளுக்குள் புதைகின்றாள் மெழுகுவர்த்திப் பெண்ணொருத்தி! 0



நினைவுகள் போதும் எனக்கு
எத்தனை தூரத்தினில் நீ இருக்கின்றாய் என்றெனக்குத் தெரியாது; எத்தனை எத்தனை அருகினில் நீ இருந்தாய் என்ற நினைவுகள் போதும் எனக்கு.. இன்றும் இனியும் என்றும் நான் காதலித்துக்கொண்டிருக்க! 0



இன்பத்தையும் அன்பையும் கூட்டும்
வாழ்வதற்கு தேவை படும் பணம் இன்பத்தையும், அன்பையும் கூட்டும். பணத்தின் தேவைக்காக வாழும் வாழ்க்கை ஆடம்பரத்தையும், மனக் கசப்பையும் கூட்டும்! 0



September 19, 2021
ஒரு இதயம் நமக்காக இருந்தாலே
நம் முகம் கொஞ்சம் சோகத்தில் வாடினாலும் ஏதாவது பேசி எதையாவது செய்து நம்மை சந்தோஷப்படுத்த ஒரு இதயம் நமக்காக இருந்தாலே போதும்.. வாழும் வாழ்க்கை சொர்கமே! 1



பரிசு தான் உங்கள் இதயம்
கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு தான் உங்கள் இதயம். அதில் எத்தனை இன்பம் துன்பங்களை தாங்கவோ சேமிக்கவோ எதுவென்றாலும் பயன்படுத்த முடியும். ‘ ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்தவதில் தான் உள்ளது. 0



நேசிப்பவரை உண்மையா நேசி
வாழ்க்கையில் சந்தோஷம்வேண்டுமென்றால் உன்னைநேசி..சந்தோஷமே வாழ்க்கையாகவேண்டுமென்றால் உன்னைநேசிப்பவரை உண்மையாநேசி..!! 0



உயிர்த்துக் கிடக்கட்டும் இவன் சுவாசக் காதல்
விலகாதிரு நீஅணுகாதிருக்கிறேன் நான்மனம் எட்டும்தூரத்தில்உயிர்த்துக் கிடக்கட்டும்இவன் சுவாசக் காதல்! 0



நினைவுகள் மட்டும் தான் நிரந்தரம்
நினைவுகள் மட்டும் தான்நிரந்தரம்.நிஜங்கள் எல்லாம் வெறும்நிழல்களே.இன்று உள்ளவை நாளைஇல்லாதவைகளே… 0



கோடை காலத்தில் ஒரு குளிர்மழை
கோடைகாலத்தில் ஒருகுளிர்மழை நாளெனயௌவனம் தழையவந்து நிற்கிறாய்;நனைய மறுத்தால்பாதகன் நானடிநனைந்துகளிக்கின்றேன்காய்ச்சலில் நடுக்கமுற! 0



September 18, 2021
உண்மையான அன்பு
உறவென்றுஆயிரம் பேர்இருந்தாலும்…ஒருவருக்காக மட்டும்மனது ஏங்குவதுதான் உண்மையானஅன்பு!! 0



உண்மையான அன்பின் மதிப்பு
இன்பத்திலும் துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும் உண்மையான அன்பின் மதிப்பு..! 0



September 17, 2021
நினைத்து கொண்டு இருப்பவர்களே
நினைத்த போது அருகில் இருப்பவர்களை விட உன் அருகில் இல்லாத போதும் உன்னை ‘ நினைத்து கொண்டு இருப்பவர்களே உண்மையான உறவுகள்..! 0



சிறு எண்ணம் இருந்தாலே போதும்
உனக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும் வலிக்கும் என்ற சிறு எண்ணம் இருந்தாலே போதும்.. துரோகமும் பழிவாங்கும் எண்ணமும் எப்பவுமே நமக்கு தோன்றாது! 0



அன்பையும் அக்கறையும் செலுத்துங்கள்
நாம் தேடிசெல்வோரைவிடநம்மை தேடிவருவோர் மீதுஅதிகம்அன்பையும்அக்கறையும்செலுத்துங்கள்..வாழ்க்கைஇனிக்கும்! 0



அருகில் இருக்க பழகிக் கொள்
நீ இருப்பதால்,யார் அதிகமாகமகிழ்ச்சிஅடைகிறாரோ,அவர் அருகில்இருக்கபழகிக் கொள்! 1



அன்பும் அரவணைப்பும் புரிவதுமில்லை
நம் மனதிற்கு எந்த காரணமும்தேவையும் இன்றி ஒரு சிலரைஅதிகமாக பிடித்து விடுகிறது.ஆனால் அந்த உறவுகளுக்கு நாம்எவ்வளவு தான் காத்திருந்தாலும்அவர்களுக்கு நம் அன்பும்அரவணைப்பும் புரிவதுமில்லைநம்மை பிடிப்பதுமில்லை. 0



மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்
ஆதவனிடம் ஒளி வாங்கி பூமியைச் சுற்றிச் சுற்றி முகம் கூட திருப்பாமல் யுகம் யுகமாகத் தேடுகிறாள் வெண்ணிலா; தன் மூக்குத்தியை தொலைத்துவிட்டாளோ பூமியில்! 0



September 15, 2021
என் தூரிகை விரல்கள்
அந்தி வானவண்ணங்களைஅப்பிக்கொண்டுஅலையும்மேகங்களைப் போல்..உன் அழகை எல்லாம்அப்பிக்கொண்டுஉருவாடத் துடிக்கின்றனஎன் தூரிகை விரல்கள்! 0



ஒரு புன்னகைக்கு உன் புன்னகையை
தன்மேல் விழும்அத்தனைஒளித் துகள்களையும்பிரதிபலித்துவிட்டுதனக்குப் பின்நிழல் என்னும்இருளைவைத்துக்கொள்ளும்பொருட்கள் அனைத்தும்சொல்வது என்னவென்றால்..உன் சோகங்களை எல்லாம்உனக்குப் பின்ஒளித்துக்கொண்டு..ஒரு புன்னகைக்குஉன் புன்னகையைபிரதிபலித்து நில் என்று! 0



இந்த மழை நாளும்
எல்லாமழை நாட்களையும்போலத்தான்இருக்கின்றதுஇந்த மழை நாளும்;ஏனோ நீ மட்டும்ஒவ்வொரு நாளும்ஒவ்வொருஅழகில் வருகின்றாய்! 0



அதற்காகவேணும் என்னை நீ காதலி
உன்னைப் போலொரு பெண்பிள்ளை வேண்டுமடி பேரழகி; அதற்காகவேணும் என்னை நீ காதலி! 0



பரிதவித்து நின்றிருக்கும் வாசகன் நான்
உலகமொழிகளில்எழுதப்படாதபுத்தகம் நீ..உன்னைப்படித்துணரமுடியாமல்பரிதவித்துநின்றிருக்கும்வாசகன் நான்! 0



September 13, 2021
Page 17 of 24
