வீட்டுத் தோட்ட முருங்கையில் கம்பளிப் புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிக்குப் பயன்படும் முருங்கை மரம் கண்டிப்பாக இருக்கும் .

இதில் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் தண்டுப் பகுதியில் இருக்கும் சொனைப் புழு அல்லது கம்பளிப் புழுக்கள்தான். முருங்கை, புங்கம் மற்றும் பூவரசம் மரம் ஆகியவற்றின் இலைகளை தின்றுவிடுவதால் மரத்தின் இலைகள் இல்லாமல் இருக்கும். மேலும் புழுக்கள் தண்டு பகுதியில் குடியிருக்கும். இதன் உடலில் கம்பளி புழுவின் உடலில் உள்ளது போன்று கூரிய முடிகள் நிறைந்திருக்கும். இவை நம் உடலில் பட்டால் அரிப்போ அல்லது தடிப்புகளோ ஏற்படும். இந்த புழுக்களை அழிக்க பெரும்பாலும் தீயிட்டு அழிப்பார்கள்.

அதனால் மரத்தின் பட்டை தீயால் கருகி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும் எரிக்கும் போது பறக்கும் முடிகள் நம்மீது பட்டால் உடலில் அரிப்பு ஏற்பட்டு தடிப்புகள் உண்டாகும்.இந்த புழுக்கள் இருக்கும் மரத்தை தீ வைத்து அழிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக நாம் வீடுகளில் சலவைக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது சலவைத் தூளை தண்ணீரில் கரைத்து புழுக்கள் மேல் ஊற்றினாலே புழுக்கள் மடிந்து விடும். எனவே சோப்பு நீர்க் கரைசலை கொண்டே முருங்கை மரத்திலுள்ள கம்பளிப் புழுக்களை எளிதாக கட்டுப்படுத்தி விடலாம்.

*தகவல்*

மா.சேர்மராஜா

இளநிலை ஆராய்ச்சியாளர்,

வேளாண்மை அறிவியல் நிலையம்,

அருப்புக்கோட்டை

9344532096

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்