நீதிக் கதைகள் சிறுகதைகள்

ஒரு அரசன் தன் பற்கள் அனைத்தும் உதிர்ந்து பொக்கைவாயுடன் இருப்பது போல் கனவு கண்டான். இதனால், அந்தக் கனவின் பின்விளைவுகளுக்குப் பயந்து காலையில் பீதியுடன் எழுந்த அவர், முதலில் ஜோதிடரை அழைத்தான். நாடி ஜோதிடர் ஒருவர், தனது ஓலைச்சுவடியை எடுத்து அதில் பற்கள் விழுந்து பொக்கையாவது பற்றிய ஓலைச்சுவடியை படித்துவிட்டு, அரசே! உன் மனைவி, பிள்ளைகள், உனது உறவுகள் எல்லாரும் உனக்கு முன்பே இறந்துவிடுவார்கள் என்றான். அரசன் உடனே கடும் கோபமடைந்து அவனைக் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டார்.

அதன் பிறகும் அரசனின் மனம் திருப்தியடையவில்லை. வேறொரு நாடி ஜோதிடரை வரவழைத்து அவரிடம் தன் பொக்கைவாய் கனவை பற்றி கூறி அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதை பார்த்துவிட்டு அரசே! உங்கள் சொந்த பந்தங்களைவிட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று கூறினான்.

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் ஒரே மாதிரியான ஓலையைத்தான் படித்தார்கள். ஒரேய விஷங்களை தான் சொன்னார்கள். ஒருவர் எல்லாரும் இறந்துவிடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார்.அவ்வளவுதான் வித்தியாசம்.

நீதி: பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்.

3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்