அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil

தமிழ் பதிவுகள் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தாயைப் போலவே, தந்தை இல்லாமல் ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கை முழுமையடையாததாகும். அப்பாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியிலும் ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறார் . தந்தை முதலில் தங்கள் குடும்பங்களை முன்னுரிமைகளை வைத்து பின்னர் தங்களுடைய தேவைகளை முன்னுரிமை வைப்பதினால் அவர் சிறந்து விளங்குகிறார்.
தமிழ்ப்பதிவுகள் அப்பா கவிதைகள் ஒரு பரந்த தொகுப்பு உங்களுக்கு வழங்குகிறது , இதன் மூலம் , நீங்கள் உங்கள் தந்தை நோக்கி உங்கள் காதல் வெளிப்படுத்தவும் முடியும். இந்த கவிதைகள் மூலம் உங்கள் தந்தை சிறப்பாக உணருவார்கள். சிறந்த சந்தர்பங்களான தந்தையின் நாள், திருமண நாள் . அத்தகைய சைகைகள் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாததால் அவர்களுக்கு கவிதைகளின் மூலம் அவர்களுக்கு மறக்கமுடியாத ஒரு நாளாக மாற்றுங்கள் .

ஒரு அன்னைக்கு பத்து மாதம் பிரசவ காலம்
ஒரு தந்தையின் பிரசவ காலம் ஆயுள் காலம்
அன்னை என்பவள் மரம் போல
தந்தை என்பவர் வேர் போல
மரத்தை அனைவரும் போற்றுகின்றோம்
வேர் ஒன்று இருப்பதை மறந்து விட்டோம்
வேர் என்ற ஒன்று இல்லை என்றால்
மரம் என்ற ஒன்று எங்கே வாழும்
வேர் செய்யும் தியாகம் தெரிவதில்லை
வேர் படும் வலிகள் அறிவதில்லை
எத்தனை தியாகம் செய்தாலும்
எத்தனை வலிதான் பட்டாலும்
வெளியில் தெரியாது வேர் தியாகம்
அன்னை பிரசவம் போன்ற உயிர்த் தியாகம்
வாழ்வில் நான் உயர அனுதினமும் உழைத்தாய்
அம்மா இருந்தாலும் நீயும் தான் என் தாய்
பட்டினி கண்டதில்லை நீ இருந்த வரையில்
நீதானே என்றென்றும் தியாகத்தின் புதையல்

உன் பங்கு உணவையும் எனக்கு ஊட்டி மகிழ்ந்தாய்
பாசத்தில் கர்ணனாக என்றென்றும் திகழ்ந்தாய்
நீ இருக்கும் வரை மதித்ததில்லை உன்னை
அதனால் தான் தவிக்கவிட்டு பிரிந்தாயோ என்னை
நீ சென்ற பிறகே உன் தியாகம் அறிந்தேன்
உன்னை பிரிந்த வருத்தத்தில் அனுதினமும் அழுதேன்
போதுமப்பா வந்துவிடு தவிக்கிறேன் உன் பிள்ளை
மரணம் என்ற ஒன்று உனக்கு என்றும் இல்லை
என் மனதில் நிறைந்தவனே வந்துவிடு விரைந்து
உன் நினைவை பிரதிபலிக்கும் இக்கவி தானே விருந்து
தந்தையர் தின வாழ்த்துக்கள் நவில்கின்றேன் இன்று
தினந்தோறும் பார்க்கிறேன் நீ எங்கே எங்கே என்று.


எங்கள் அப்பா கவிதைகளால் உங்கள் தந்தைக்கு மறக்கமுடியாத தருணங்களை செய்யலாம்.

Appa Kavithai in Tamil

0

தோழனாய் நடத்தியவரே

அப்பா தோளில் சுமந்தவரே தோழனாய் நடத்தியவரே என் இமைக்குள் இமையாய் இருந்த என் அப்பா. உன்னை…
0

வளமுடன் வாழ

தன்னுடல் தேய தானுழைத்து சுயமாய் நான் நிற்க வழிவகுத்த வள்ளல் வளமுடன் வாழ- இறைவா நீ…
0

ஒரே உறவு அப்பா

அன்பை உள்ளே வைத்து கொண்டு எதிரியை போல் தெரியும் ஒரே உறவு அப்பா 4638
0

தந்தையின் கண்ணீர்

மரணத்தை விட கொடியது ஒன்று உண்டு எனில் அது தந்தையின் கண்ணீர் தான் 
1

அப்பாவை போல்

எத்தனை பேர் நான் இருக்கிறேன் என்று சொன்னாலும் அப்பாவை போல் யாராலும் இருக்கவே முடியாது 
0

சுமக்கும் வீரமகன்

தந்தை வீட்டையும் வீட்டாரையும் வீரியமாக சுமக்கும் வீரமகன்
0

என்னுயிர் தந்தையே

என் வாழ்வில் முதலில் என்னை சந்தித்து என் முதல் காதலைப் பெற்ற முதல் ஆண்மகன் என்னுயிர்…
0

கழுத்தில் கைகள் கோர்த்து

கழுத்தில் கைகள் கோர்த்து மூக்கோடு மூக்குரசி என் கன்னத்தில் முத்தங்கள் தந்து தோளில் தோள் சாய்த்து…
0

தேய்ந்து போகின்ற அப்பாகளின் பாதத்தில்தான்

தேய்ந்து போகின்ற அப்பாகளின் பாதத்தில்தான், மகள்களின் வாழ்க்கை பயணம் தொடங்குகிறது...
0

அன்பை மறைத்து

அன்பை மறைத்து பொய்யான கோபத்தை காட்டுகிறான் அதை புரிந்துகொள்ள முடியாமல் எதிரியாய் பார்க்கிறோம் பாலூட்டிய தாயின்…
0

நூறு ஆசானுக்கு

நூறு ஆசானுக்கு ஒப்பானவர் பொறுப்புமிக்க ஒரு தந்தை 
0

பத்து திங்கள்

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை தாய்க்கும் பிள்ளைக்குமாய் ஆயுள் வரை தாங்கிடும் ஒரே உயிர்…
0

அப்பாவின் அருமை தான்

அப்பாவின் அருமை தான் அப்பா ஆகும்வரை எந்த மகன்களுக்கு தெரிவதில்லை புகுந்த வீடு செல்லும் தினம்…
1

காத்திருக்கும் தந்தை

மகள் பரிட்சை எழுதி முடிக்கும் வரை பதில் தெரிந்த கேள்வி வரவேண்டுமென்று பள்ளி வாயிலில் பதற்றத்தோடு…
0

இரவு நெடுநேரம்

அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாய் வருகிறது இரவு நெடுநேரம் கண் விழித்தாலே இப்படித்தான் இன்று சீக்கிரமாய் தூங்கவேண்டும்…
0

தடுமாறும் போது

தடுமாறும் போது தோள் குடுத்து தடம் மாறும் போது தட்டி கேட்கும் என் தோழமை.... 
0

மகத்தான மனிதர்களில்

மனதினில் இருக்கும் மகத்தான மனிதர்களில் மெம்மேலும் மதிக்கத்தக்க மண்ணினில் ஏந்தி நிற்க மாசடையா மனித்துளிகள் தந்து…
0

தந்தையின் சுடுசொல்லை

தந்தையின் சுடுசொல்லை வலி எனக்கருதி உடையதே அது உன்னை சிலை செய்யும் உளி
0

ஒரு தந்தையின் ஏக்கம்

ஒரு தந்தையின் ஏக்கம் ————————— மகனே! என் மகனே! முப்பது வயது வரை உன்னை முதுகில்…
0

அப்பாவின் வண்டியில் முன்

அப்பாவின் வண்டியில் முன் அமர்ந்து வேகமாய் முட்டவரும் காற்றோடு சண்டையிடும் மகிழ்ச்சியை எந்தப் பயணமும் தரமுடியாது 
0

என் கரம் பிடித்து நடக்கையில்

என் கரம் பிடித்து நடக்கையில் அளவில்லா மகிழ்ச்சியில் தந்தை.... இப்போது அவர் கரம் பிடித்து நடக்கையில்…
0

கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை

அப்பாவுக்காக என்ன? சொல்லி அழுவேன்.கொல்லியிடும் வாய்ப்புக்கூட வாய்க்கவில்லை.நீ கண் மூடிய செய்தி காதில் விழுந்தும் கல்லாய்…
0

தோள் மீது சுமக்கையில்

தோள் மீது சுமக்கையில் அன்னையின் பாசம்: துவண்டு விழுகையில் துணைநிற்கையில் நண்பனின் பாசம்: விரல் பிடித்து…
0

ஏன் தந்தையே

உன் ஒருதுளி வியர்யால் நான் உருவாகி நிற்கின்றேன் இன்று நீ என்னை காணாமல் ஏன் தந்தையே.........…
0

அப்பாவின் கை

அப்பாவின் கையை பிடித்து நடந்தவன் அதே தந்தையை கையை பிடித்து அழைத்து செல்கிறான்.
0

அப்பாவின் மனது

அருகில் இருக்கும்போது கொஞ்சாமல் தூரச் சென்றவுடன் அய்யோ என பதறும் அப்பாவின் மனது
0

உங்களோடு வாழ்ந்த காலம்

உங்களை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து..... தவிக்கின்றேன் உங்களோடு வாழ்ந்த காலம் கனாக்காலமாய் போனதுதென்ன.... நான்…
0

உன் சாயலில் நான்

உன்னைப்போல் ஒருவரை இன்று நான் பார்த்தேன் உன் சாயலில் நான் நீ என்று நான் இன்று…
0

உன் வீரத்தை

உன் வீரத்தை யாரிடமும் இன்னும் நான் பார்த்ததில்லை......இனியும் யாரிடமும் நான் பார்க்க போவதில்லை நீ கல்லை…
0

மகள்களிடமே

அப்பாக்களின் உயிர் பெரும்பாலும் மகள்களிடமே தங்கிவிடுகிறது!!!

1 thought on “அப்பா கவிதைகள் | APPA Kavithai in tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்